Author: Jansi
-

Epi 10_Manadhoram Unthan Ninaivugal
அத்தியாயம் 10_மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 10 யாசகம் பிரிவென்றே முடிவாகி விட்டப்பின்னர் கொஞ்சம் சேமித்துக் கொள்கிறேனே? செவிகளில் உன் குரலை… கண்களுள் உன் உருவத்தை… உணர்வினில் உன் அன்பை… உறவினில் நீ எனக்கானவனில்லை யாரோவெனும் கொடும் வலியை… கொஞ்சம் நானும் சேமித்துத்தான் கொள்கிறேனே? மீரா பழையவற்றை அசை போட்டதில் கலக்க உணர்வோடு தாமதமாக தூங்கி வெகு தாமதமாக எழுந்து அவசரமாக சுடிதார் ஒன்றை எடுத்து அணிந்து அலுவலகத்திற்கு புறப்பட்டவள் தங்களது அறையை சுற்றிப் பார்த்தாள். அது…
-

Epi 9_Manadhoram Unthan Ninaivugal
அத்தியாயம் 9_ மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 9 சகஜம் ஒவ்வொரு முறையும் என் முகம் ஏன் பார்க்கின்றாய்? என்றறிவேன். உந்தன் பேச்சும், நெருக்கமும், அக்கறையும் உணர்த்தும் உந்தன் காதலுக்கான பதிலை என்னிடம் தேடுகின்றாய். உனக்கான உணர்வுகளை பிரதிபலிக்காத என் முகம் பார்த்து ஒருபோதும் மனம் தளராதே… ஆர்ப்பரிக்கும் கடலின் அடியாழங்களில் அமைதி நிலவுவது சகஜம் தானே? **** POSH அதாவது Prevention of Sexual Harassment at the Workplace எனும் சட்டம் பணி புரியும்…
-

Epi 8_ Manadhoram Unthan Ninaivugal
அத்தியாயம் 8_ மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 8 இலயிப்பு கடற்கரைச் சிப்பிகளில் மகிழ்ந்திடும், சிறுபெண்ணாய் அல்லவோ இருந்தேன். அன்றொரு நாள் ஆழி அலையென நீ என் வாழ்வில் வந்தாய். உனதன்பினுள் சருகெனவே எனைச் சுருட்டிக் கொண்டாய். அன்பின் சுவையினை நீ உணர்த்தியப் பின்னர் எனை உதறிச் செல்தல் தகுமோ? ஆழ் கடலின் அழகறிந்தவள், உயிரற்ற சிப்பிகளில் –இனியும் மனம் இலயித்திடல் ஆகுமோ? சட்டென்று நிகழ்ந்தவைகளில் மீரா மூச்சடைத்துப் போனாள். லிஃப்டில் இருந்த அந்த சில நிமிடங்களில்…
-

Epi 7_ Manadhoram Unthan Ninaivugal
அத்தியாயம் 7_ மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 7 உந்தன் காதல் பாரமாகவும்சுகமாகவும் சிரமமாகவும்உரிமையாகவும் இழந்தால்வெறுமையாகவும் என கங்காரு குட்டி போல்என் மனதில் உந்தன் காதல். அலுவலகத்தில் என்றுமே தனது மதிப்பு மரியாதையை மிகவும் பேணிக் காப்பவள் மீரா. அவளைக் குறித்து யாரும் வீணாக ஒரு சொல் சொல்ல முடியாத அளவிற்கு நடந்துக் கொள்வாள். பிறர் குறித்த பேச்சுக்கள், வதந்திகள் என எவற்றிலும் ஈடுபடுவதில்லை. இப்போது ஹைதராபாத் அலுவலகம் வந்த அடுத்த நாள் முதலாக கார்த்திக்கின் தலையீட்டால்…
-

Epi 6_Manadhoram Unthan Ninaivugal
அத்தியாயம் 6_மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 6 அகராதி உயிர் குடிக்கின்றன உந்தன் பார்வைகள் மென் காதலை வன்மையாய் சொல்லும் கலையொன்றை நீ கற்றிருக்கின்றாய். வான் மேகத்தை நூலால் இழுக்கும் திறன் பெற்றிருக்கின்றாய். வா என்னோடு என்று கைப்பற்றுகையில் மட்டும் – எனை புறம் தள்ளிச் செல்கின்றாய். உன் பார்வைக்கும், செயலுக்கும் பொருள் சொல்லும் அகராதியை தினம் தேடும் பைத்தியக்காரியாக நான். ‘இந்நேரம் இவன் எப்படி இங்கே வந்தான்?’ எனும் குழப்பத்தில் மீரா இருக்க, அவனோ இவளை…
-

Epi 5_Manadhoram Unthan Ninaivugal
அத்தியாயம் 5_மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 5 அழகானவை முகத்தை கல்லென வைத்துக் கொண்டு,நீ காட்டும் பிரியங்கள் எவ்வளவு அழகானவை! கேலியான பேச்சுகளுக்குள் வெளிப்படும்உந்தன் அக்கறைகள் எவ்வளவு அழகானவை! நீ சொல்லா விட்டாலும் உனை புரிந்து புன்னகைக்க வைக்கும் சொல்லப்படாத உந்தன் அன்புகள் தான் எத்தனை அழகானவை! அலுவலகத்திற்கு தினம் தோறும் செல்வதும் தான் எந்த வேலைக்காக சென்றாளோ அந்த வேலையை திறம்படச் செய்வதுவும், கார்த்திக் வந்து அழைத்ததும் சென்று அவனருகே அமர்ந்து அவன் சொல்லும் திருத்தங்களை…
-

Epi 4_Manadhoram Unthan Ninaivugal
அத்தியாயம் 4_ மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 4 இதயக் கொள்ளளவு உந்தன் பார்வைகளிலும், அகத் தீண்டல்களிலிலும் இடையறாமல் பொழியும் காதல் மாமழையில் பெருக்கெடுத்து நிறைகின்றது என் இதய அணை. கொள்ளளவு மிகுந்து உடைப்பெடுக்கும் முன்னே சேதாரங்கள் தவிர்க்க வந்து விடேன் உந்தன் காதல் சொல்லி விடேன். ஹைதராபாதில் தனது முதல் நாளை முடித்து அலுவலகத்தினின்று கெஸ்ட் ஃஹவுஸிற்கு திரும்ப வரவேண்டி புறப்பட்டு நின்ற மீரா, தான் சென்ற நேரம் முதலாக எதிர்பார்த்திருந்த கார்த்திக்கை எதிர்பாராத நேரத்தில்…
-

Epi 3_Manadhoram Unthan Ninaivugal
அத்தியாயம் 3_மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 3 காதல்வியாதி ஆணென்றும் பெண்ணென்றும் பாலினம் பாராது… படிப்புக்கும், பகட்டுக்கும் வித்தியாசம் காணாது… பேதங்கள் இன்றியே, அனைவரையும் தாக்கும் இந்த காதல் ஒரு தொற்று வியாதி. மீராவின் கலக்கம் இரவிலும் தொடர, தன்னையறியாமல் நான்கு மாதங்களுக்கு முன்னதான நினைவுகளில் அமிழ்ந்தாள். அன்று வழக்கம் போலொரு வெள்ளிக்கிழமை சாயுங்கால நேரம். வேலை நேரம் முடிகின்ற போது அவளுக்கு மேலதிகாரியிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. அவள் அந்த டைரக்டரின் கேபின் சென்று நிற்க, உள்ளே…
-

Epi 2_Manadhoram Unthan Ninaivugal
அத்தியாயம் 2_மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 2 கண்கட்டு வித்தை கல்லைக் கண்டவர் நாயகனை காணவியலவில்லையாம். நாயகனை கண்டதுமோ கல்லை காணவில்லையாம். உன்னைத் தேடி உன் நினைவுகளில் சிக்கிக் கொள்வதும், உனை நேரில் கண்டாலும் கானலென திகைப்பதுவும் என கண்கட்டு வித்தையதில் மாட்டித்தவிப்பதிலே… அந்த சிற்பியும் நானும் ஒன்று. தனக்கு நிகழ்ந்தது கனவு என்று மீராவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவள் ஹைதராபாதில் இருந்து திரும்பி வந்து நான்கு மாதங்களாகிற்று. இத்தனை நாட்கள் வராத கனவா இப்போது…
-

Epi 1_Manadhoram Unthan Ninaivugal
அத்தியாயம் 1_மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 1 கனவுகள் உன் நினைவுகளிடமிருந்து தப்பிக்கும் மார்க்கம் அறியாது உறக்கத்தை நாடினால் அங்கேயும் வந்து கனவுகளை திருடிவிடுகிறாயே? அடித்துப் போட்டார் போல தூங்கிக் கொண்டிருந்த மகளை கவலையாக பார்த்து விட்டு நகர்ந்தார் தங்கம். “மீரா மீரா இன்னுமா எழுந்துக்கலை அவ?” மகளுக்கு குரல் கொடுத்த மனோகர் மனைவியிடம் கேள்வியை நிறுத்தினார். “இந்தப் பொண்ணு என்னிக்கு வேலை விசயமா வெளியூர் போயிட்டு வந்ததோ அன்னிலருந்து இப்படித்தான் ஒரே தூக்கம். அப்படி என்ன…
