அத்தியாயம் 8_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி

அத்தியாயம் 8
அடுத்த நாள் கீழ்ப் பகுதியில் இருந்த குடும்பத்தினர் பேச்சுக்களிலிருந்து குமரேஷ் குடித்து விட்டு கீழே விழுந்து அடிப்பட்டதாக அவளுக்கு தெரிய வந்தது. அவனது தொல்லை சில நாட்கள் இல்லாதிருக்க சில வாரங்கள் நிம்மதியாக இருந்தாள்.
அன்று வழக்கமானதொரு மாலைப் பொழுது, தனது ரிப்போர்ட்டுகளை எல்லாம் மேனேஜருக்கு அனுப்பி வைத்தவள் இனி புனிதாவுக்கு வேலைக் கற்றுக் கொடுத்துக் கொண்டு புறப்பட வேண்டியதுதான். அந்த இரண்டு நாட்கள் பிரச்சனைகளுக்குப் பின்னர் தனது பாதுகாப்புக் கருதி அவள் விரைவாக தன்னுடைய வேலைகளை முடித்து விட்டு புறப்பட்டு விடுவதுண்டு. மணிவண்ணனும் அதற்கு ஒன்றும் தடைச் சொல்லியதில்லை.
சமீப காலமாக அவன் அவளைப் பார்த்து வினோதமாக புன்னகைப்பதாக தோன்றிற்று. ‘புள்ளக் குட்டிக்காரனாச்சே நல்ல மனுஷனாச்சே எதுக்கு என்னைப் பார்த்து அனாவசியமா சிரிச்சிங்க்? நாம கொஞ்சம் அலர்ட்டா இருப்போம்’ என முடிவுக்கு வந்தாள்.
நீ முறைப்பதைக் கூட சகித்துக் கொள்வேன்
மணிவண்ணா
சிரிக்காதே… சற்றும் புன்னகைக்காதே
பயந்து பயந்து வருதடா
திகிலு திகிலா இருக்குதடா
கரு நிறக் கண்ணா!
மணிவண்ணா, கண்ணா இது தவிர உனக்காக எதையும் எழுத வரலைடா… அதெல்லாம் என் ஆளுக்கு நான் எழுதுவேன் விதவிதமா… அஞ்சு காசுக்கு பிரயோஜனம் இல்லாம உனக்கெல்லாம் எஃபெர்ட் போட்டு எழுத முடியுமா? கற்பனையை சிதறடிக்க இயலுமா? மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டாள். மறவாமல் அந்த தாளை வீட்டிற்கு போகும் முன்பாக தன் டைரியில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணிக் கொண்டாள் நம் கவிதாயினி.
இன்றைக்கு என் ஆளு லெமன் யெல்லோ கலர் சட்டை… என்னமா இருந்தான்யா? பிரனீத்தை எண்ணி சிலாகித்துக் கொண்டாள்.
நீ மஞ்சள் மேகத்திலிருந்து
தவழ்ந்து விழுந்தாயோ?
எழுந்து நான் காணவே
ஆஃபீஸ் வந்தாயோ?
அடடா அடடா பேஷ் பேஷ் என்னா கவிதைய்யா? தன்னைத் தானே சிலாகிக்கும் போதே புனிதா வந்திருந்தாள்.


Leave a Reply