அடுத்த வாரம் அவளுக்கு சற்று மந்தமாகவே நகர்ந்தது. நகர்ந்தும் புதன் கிழமையை தொட்டு விட்டிருந்தது. ‘இன்னும் இரண்டே நாட்கள் தான் அதன் பின்னர் அவனை பார்க்க இயலாது’, என எண்ணிக் கொண்டு கள்ளத்தனமாக அவன் முகத்தை பருகினாள். வாட்சப்பில் பகிரப்பட்டு இருந்த புது க்ளையண்டுக்கான முதல் நாள் வேலையன்று கேக் வெட்டியபோது, பாராட்டு கிடைத்ததென்று கொண்டாடியபோது என கடந்த மாதங்களில் சிலவிழாக்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவன் முகம் இருந்த புகைப்படங்களை மிகவும் அக்கறையாக பத்திரப்படுத்தினாள்.
இன்னும் அவனுடன் சென்று பேச பயந்தாள், ‘அவனிடம் கேட்பாய் அதன் பின் என்ன செய்வாய்? அவன் உன்னை திருமணம் செய்துக் கொள்வான் என எண்ணுகின்றாயா? தாய் தந்தை இல்லாதவள் எனத் தெரிந்து மற்றவர்கள் நடந்துக் கொண்டது போன்ற அதே உதாசீனம் தானே கிடைக்கும். அவனிடமிருந்து உதாசீனத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக இந்த இனிமையான உணர்வை மனதிற்குள் வைத்துக் கொள்ளலாமே? வயது ஆகிக் கொண்டிருப்பதை மறந்து உனக்கு இந்த ஆசைகள் வந்தது மிகத் தவறு’ மனம் அவளை வாட்டியது.” நீ திருமண வயதை கடந்து விட்டாய், கொஞ்சமாவது வயதிற்கேற்றபடி நடந்துக் கொள்” மனம் உள்ளூர அலறிக் கொண்டே, அவளை பயமுறுத்திக் கொண்டே இருந்தது.
தொடரும்.


Leave a Reply