அந்த குமரேஷ் அந்நேரம் எங்கிருந்து வந்தானோ? அவளின் எதிரில் வந்து அவள் அருகில் நடந்து அவளை பச்சை பச்சையாக வருணிக்க ஆரம்பித்தான். மனைவி ஊருக்கு சென்றிருக்க இவனுக்கு இறக்கைகள் முளைத்திருந்தன போலும் “இரவு எங்கே சென்று வருகிறாய்? எவனோடு சுற்றப் போனாய்? என்னைப் போல ஆட்களோடு சுற்ற வர மாட்டாயா? பெரிய பணக்காரன் கிடைத்தால் மட்டும் சுற்றப் போவாயா?” என பின் தொடர்ந்தான். அவள் கவனிக்காதவள் போலும் அந்த குடியிருப்பின் வாயிலை திறக்கவும் வீட்டின் உரிமையாளர் எதிரில் வந்தார்.
“என்னம்மா இன்னிக்கு லேட்டா?” கேட்டவருக்கு,
“ஆமா சார்” பதிலளித்து முன்னேச் சென்றாள். வீட்டு உரிமையாளரைக் கண்டதும் குமரேஷ் அங்கிருந்து நகர்ந்து விட்டிருந்தான். அவன் பின்தொடரவில்லை என்றதை அறிந்துக் கொண்டதும் அவள் பேயிடமிருந்து தப்பித்ததைப் போல அவசரமாக படியேறி தனது அறையினுள் அடைத்துக் கொண்டாள்.
தொடரும்

Leave a Reply