Epi 4_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi

“என் தங்கம்டா நீயி…”

“போதும் போதும் தடமே தெரியக் கூடாது…க்ளீன் பண்ணுங்க…”

உடனே டீ கப்பில் பிஸ்கட் கவரை திணித்தவள் தன் பையில் இருந்து டிஸ்யூவை உருவி டேபிளை துடைத்து அதையும் கப்பில் திணித்தாள்.ட்ராவிலிருந்து ஒரு எழுதி கிறுக்கிய தாளை உருவி டீ கப்பை அதனுள் பொதிந்தாள்.

அதனை வாங்கிய ராபர்ட் பொதிந்த பின்னரும் தாளின் மேல் எழுதி இருந்தது தெரிய சற்று சரித்து வாசித்தான்.

டேய் அமித்து…

உனக்கெல்லாம் ஆண்டவன்

சீக்கிரம் வைப்பான்டா ஆப்பு

“ஆஹா …அக்கா உங்க புதுக்கவிதை அபாரம்…” சிரித்தான்.

“டேய் அந்த தாளாடா இது?… சும்மா கிறுக்கினதுடா அதை இங்க தா…வேற தாளால சுத்துறேன்.”

“ஹா ஹா ஹா இதை மட்டும் அவன் பார்த்தான் நீ நல்லா மாட்டுன அக்கா…”

வழக்கமாக தனக்கு தோன்றுவதை வரைந்தோ, எழுதியோ தீர்க்கின்ற பழக்கத்தில் அதையும் எழுதி இருந்தாள்.

“டேய்…”

“சரி சரி ….”

பேனாவை எடுத்து அவன் கையில் இருந்த தாளின் மேல் எழுதி இருந்த கவிதை (??!) மேல் கிறுக்கி  எழுதி அதை மறைத்தாள்.

“விடுக்கா அந்த ஹிந்திக்காரனுக்கு என்ன தமிழ் தெரிஞ்சிக்கப் போகுது?”

“நம்ப முடியாதுடா…சும்மாவே என்னை கண்டா எண்ணையில் போட்ட சிக்கன் கணக்கா குதிப்பான்.”

“அக்கா அவன் வெஜிடேரியன்…”

“சரி சரி உவமை மாத்திடுறேன்….சும்மாவே எண்ணையில் போட்ட அப்பளம் மாதிரி பொரிவான்…”

ஹா ஹா வென ராபர்ட் சிரித்துக் கொண்டிருக்க

“என் கவிதை வாசிச்சான்னா கதை கந்தல்…கழுத்தில் கை வைத்து ஷ்க்க்…”ஆக்ட் கொடுத்தாள்.

“ரொம்ப ஆக்ட் கொடுக்காதக்கா…நீயாவது பயப்படறதாவது…”

முறைக்கிறவளை பொருட்படுத்தாது தொடர்ந்தான்…

“ஒன்னும் நம்பற மாதிரி இல்ல”

என்றவனுக்கு தலையை சரித்து நாக்கை நீட்டி பழிப்பு காட்டினாள். புறப்பட்டவன் கையில் தன் பையிலிருந்து ஒரு ஸ்னாக்ஸ் டப்பா எடுத்து நீட்டினாள். சிரித்துக் கொண்டே வாங்கியவன் அங்கிருந்தது சென்றான்.

கணிணியில் கவனம் செலுத்தவே இப்போது இயற்கை அழைப்பிற்காக சென்று வந்தாள். முதுகின் குறுகுறுப்பு அளவு அதிகமாக கூடிப்போய் இருந்ததை உணர்ந்தாள். ஆனால், தன்னை கவனிப்பது யார்? என்று சுத்தமாக அவளுக்கு புரியவில்லை.

Pages: 1 2 3 4 5


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!