2.”வளி”யவள்_சிறுகதை_ஜான்சி

“ஆவ்…” கொட்டாவி விட்டவள் அவனிடம்,

“உங்களுக்கு லேடீஸ் சைக்காலஜி பற்றி தெரியலை ஆனாலும் ஒரு சிலது சரியாதான் செய்யறீங்க.”

“என்னது சைக்காலஜியா?”

“ம்ம்”

“எப்படி?”

“நீங்க இதெல்லாம் அதுதான் இந்த வீடு வசதிகள் இப்படி இருக்கும்னு சொல்லாம கொள்ளாமல் என்னை இங்கே அழைச்சுட்டு வந்திருந்தால் அது உங்களோட தப்பாக ஆகி இருக்கும். அப்படி ஆகி இருந்தால் எனக்கு ஒருவேளை உங்க மேல் கோபம் கூட வந்திருக்கலாம். ஆனால், இதையெல்லாம் நீங்க முன்னமே சொல்லவும், நான் மனதளவில் இதற்காக தயாராகிட்டேன். அதனால அதைத் தாண்டி யோசிக்க எனக்கு சுலபமா இருந்தது.”

“ஓ”

“இன்னொரு விஷயம் ….”

“ம்ம்”

“இது உங்க வீடுன்னா என் வீடும் தானே?”

“நிச்சயமா” அவசரமாக பதிலிருத்தான்.

“ஆனால் நீங்க என்னை பார்த்திருந்தீங்கல்ல… அந்த மாளிகை அது என் வீடு இல்லை, என் மாமா வீடு. அங்கே நான் கிட்டத்தட்ட ஒரு அகதி மாதிரி.”

பேச்சற்று கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு முழுமையும் சொல்லாமல்,

“உங்களுக்கு இன்னொரு லேடீஸ் சைக்காலஜி சொல்லட்டுமா?”

“சொல்லு”

“பொண்ணுக்கு தனக்கு உரிமையான இடத்தில வாழறதுதான் ரொம்ப பிடிக்கும், உரிமைதான் முக்கியம் எல்லா நேரமும் இடத்தோட பரப்பளவு முக்கியமில்லை.”

அவளை ஆழ பார்த்திருந்தான்.

“இன்னிக்கு இவ்வளவு கத்துக்கிட்டது போதும். அதிகம் கத்துக்கிட்டீங்கன்னா என்னை விட ஸ்மார்ட் ஆகிருவீங்க, அது எனக்குத்தான் ஆபத்து.” 

சற்று நேரத்தில் தூக்கத்தில் ஆழ்ந்தவளை மென்முறுவலோடு பார்த்திருந்தான்.

அடுத்த நாள் காலையே அவளது பொருட்கள் வந்து இறங்கி விட்டிருந்தன. அவ்வீட்டின் பரப்பளவை முன்னிட்டு சிலப் பொருட்களைத் தான் மும்பைக்கு வரவழைத்து இருந்தான். காலை உணவை கடையில் இருந்து வாங்கி உண்டனர்.

“பரவால்லியே இங்கே இட்லிலாம் கிடைக்குது” என்றவளிடம்,

“இங்கே எல்லாமே கிடைக்கும்.” என்றான்.

பாத்திர ஸ்டாண்ட், சின்ன கப்போர்ட் எல்லாம் பார்சலில் வந்திருக்க, மதியம் வரையில் அத்தனையையும் அடுக்க உதவினான். மதிய உணவையும் வெளியில் இருந்து வாங்கி வந்தான்.

Pages: 1 2 3 4 5 6 7 8 9


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *