“ஆப் மகேந்திரன் ஹோ க்யா?” ( நீங்கள் மகேந்திரனா?)
“ஹாஞ்சி” (ஆமாங்க)
“மை லலித், முஜே ஆப்சே பாத் கர்னா ஹை.” (நான் தான் லலித், உங்க கிட்ட பேசணுமே?)
அலைபேசியின் உரையாடலின் முடிவில் சாயங்காலம் அந்த கஃபேயில் மகேந்திரனும் லலித்தும் சந்தித்தனர்.
“எனக்கு யாமினியை பிடிச்சிருக்கு… அவளை கட்டிக்க விரும்புறேன்.”
“இதை என் கிட்ட வந்து கேட்க என்னத் திமிர்? நான் அவ தகப்பனில்ல…புருசன்.”
“அவளோட திறமைக்கும், அழகுக்கும் நீங்க எப்படி பொருத்தம்……….” அடுத்த நொடி அடியின் வேகத்தில் அவன் கன்னம் சிவந்து எரிந்து இருந்தது.
“ஹே மேன் என்னையே அடிச்சிட்டியா? யூ யூ…”
“இனி ஒரு தடவை அவ பக்கம் உன்னை பார்த்தேன் வெட்டி பொலி போட்டிருவேன்” மகேந்திரனின் மீசை துடிக்க, கண்கள் சிவந்திருந்தன. லலித் நடுங்கியவாறு அங்கிருந்துச் சென்றான்.
பில்லைக் கட்டியவன் தங்களைப் பார்த்துக் கொண்டு கூடி நின்ற கூட்டத்தை கண்டுக் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்தான். சற்றுத் தள்ளி ஆளரவமற்ற இடம் தேடி அமர்ந்தான். கோபத்தில் இன்னும் அவனது கைகள் நடுங்கிக் கொண்டு இருக்க, தனது அலைபேசியை எடுத்து மனைவிக்கு அழைத்தான்.
“யாமி…” மூச்சு வாங்கியது.
“மஹேன் என்ன செய்யுது?”
“எங்க இருக்க?”
“வீட்டிலத்தான், உனக்கு என்ன சமைக்கட்டும்?”
அலைபேசியை துண்டித்தவன் ‘செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு கூலா என்ன சமைக்கட்டும்னு கேள்வி வேறயா?’ கடுப்பில் எழுந்து நடந்தான்.
லோக்கல் இரயிலில் இருந்து இறங்கி ரிக்ஷா பிடித்து வீட்டை அடைய இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது.

Leave a Reply