Epi 10_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi

“நான் பத்தினியோ இல்லையோ, நான் யார் கூடவும் எங்கேயும் சுத்துறேன்னு நீ நினைச்சா அப்படியே சுத்திட்டு போறேன்… இப்ப உனக்கு என்னடா பிரச்சனை? என் வீட்டுக்கு வந்து உட்கார உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? எழுந்து போடா நாயே…”

குரலை எழுப்பாமல் உறுமினாள்.

“ரொம்ப பிகு செய்யாதடி…நானும் வந்த நாள் முதலா பேச்சுக் கொடுத்து பார்த்தாச்சு மசிய மாட்டேங்குற…என் பொண்டாட்டி ஊருக்கு போன நேரம் உன்னை கரெக்ட் செஞ்சாகணும்னு எத்தனை நாளா போட்ட திட்டம்… வீணா போக விட முடியுமா?…பொட்டச்சி உனக்கு அவ்வளவு திமிரா?”

“டேய்…”

“அனாத நாயி… இங்க பாரு இன்னிக்கு ராத்திரி வரைக்கும் தான் உனக்கு டைம் தாரேன்…நல்லா யோசிச்சுக்கோ… வெளியே தெரியாமல் என்கூட நீ குடும்பம் நடத்துற…இல்ல உன்னை என்ன சொல்லி நாறடிப்பேன்னு தெரியாது. இங்கே இருந்து எங்கே போனாலும் உன்னை தேடி வருவேன், விட மாட்டேன்.”

“…டேய் போடா நாயே …நான் செத்தாலும் சாவேனே தவிர உன் ஆசைக்கு பலியாக மாட்டேன்…எழும்பி போடா…” ஆலிஸின் குரல் நடுங்கியது.

“ரொம்ப துள்ளாதடி…உனக்கெல்லாம் இப்படி ஆம்பளைங்க அமைஞ்சா தான் உண்டு. இப்ப எனக்கு என்ன குறைனு எதிர்த்து பேசி ஆடுற? …நாம குடும்பம் நடத்த ஆரம்பிச்ச பின்னால உன் சம்பளத்துல பாதி தந்தா கூட போதும் அட்ஜஸ்ட் செஞ்சுப்பேன். ஆம்பள துணையில்லாத உனக்கு துணையும் ஆச்சு…மத்ததும் தான்…நீ வேணும்னா …இஷ்டம் போல வேற யாரையும் கூட சேர்த்துக்க நான் ஒன்னியும் சொல்ல மாட்டேன்… அழகா வேற இருக்க உனக்கு பாதுகாப்புக்கு செக்யூரிட்டி மாதிரியும் ஆச்சு, ஆசைக்கு ஆசையும் ஆச்சு… எப்படி என் யோசனை?”

அவன் பேசிக் கொண்டே செல்ல …ஏதோ ஒரு உக்கிரத்தில் கத்தியை தன்னை நோக்கி அவள் திருப்பிய கணம் அந்த சத்தம் கேட்டது.

ஆலீஸின் வீட்டிற்குள் வந்திருந்தனர் ஓனரும் அவர் மனைவியும். “குடும்பஸ்தன்னு தானே உனக்கு வீடு கொடுத்தேன், என்னடா செஞ்சு வச்சிருக்க குடிகாரப் பயலே” வீட்டு ஓனர் அவனை ஓங்கி அறைந்தார் அவன் நிலைத் தடுமாறி கீழே விழுந்திருந்தான்.

Pages: 1 2 3 4 5 6 7 8


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!