“ஒன்னு போட்டேன்னா?” கைகளை உயர்த்தியவன் அடிக்க முடியாமல் இறக்கினான்.
வித் யுவர் பர்மிஷன் அவளருகில் சென்று முகத்தை கையில் ஏந்தி கண்களிடம் சம்மதம் கேட்டான். அலைப்புறும் அவள் கண்களின் மொழி அவனுக்கு என்ன புரிந்ததோ?
அவள் உதடுகளை அளவு பார்ப்பது போல நிரடியது அவனது பெருவிரல் அடுத்த நொடி தன்னிதழ்களால் அவளது இதழ்களை கவ்விக் கொண்டான். கைகள் முன்னேறி அவள் இடுப்பை வளைக்க தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
நொடிகள் நீள அவனை விடுவித்தவன் கண்கள் சிவந்திருந்தன… பரிதவிப்பில் அவன் முகம் கசங்கியிருந்தது.
“இனி ஒரு முறை இப்படி செய்வ?” மாட்டேன் என தலையசைத்தாள். “கத்தி ஏந்துறியா தப்பே இல்லை. உன்னை வதை செய்ய வர்றவனை கொலை செஞ்சிடு அதற்கப்புறம் என்ன நடக்குதுன்னு பார்த்துக்கலாம். நீ சாக நினைக்கக் கூடாது புரியுதா?”
………..
“ஏன்னா நீ தனியில்ல, நானும் இருக்கேன் உனக்கொன்னுன்னா அது என்னையும் பாதிக்கும். ரொம்ப ரொம்ப மோசமா பாதிக்கும்” முகம் கசங்க அவன் சொன்னான்.
அவனது வார்த்தைகளை உள்வாங்கின மனது சமன்பட்டுப் போனது. கேளாமல் கிடைத்த ஒரு வரம் போல, தேடாமல் கிடைத்து விட்ட சொர்க்கம் போல அவன் அவளுக்குத் தோன்றினான்.
“Yen Nodthiya?” கேட்டவனிடம் ‘ஐயையோ ஓவரா ஓவரா பார்த்துட்டோமோ?” சுதாரித்தவள்… “ஒன்னுமில்ல சும்மாதான் பார்த்தேன்” என்றவளாக தரை நோக்கினாள். ‘பரவால்லியே இரண்டாவது தடவையிலேயே புரிஞ்சிடுச்சே?’ அவன் முகத்தில் மென்முறுவல் படர்ந்தது.
அவளை உண்ண வைத்து புறப்படும் போது, “போலீஸ் ஸ்டேஷன் போறோம், அங்க என் அனுமதி இல்லாம ஒரு வார்த்தை… ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது” மிரட்டினான்.
“நீங்க ஆஃபீஸ்ல இப்படி இல்ல, இப்ப ரொம்ப டாமினேட்டிங்கா இருக்கீங்க” குறை படித்தாள்.
“உன் கிட்ட இப்படி இருந்தாதான் வேலைக்கு ஆகும் சும்மா வா” அவன் பின்னாலேயே அவள் முகத்தை தூக்கிக் கொண்டு வந்தாள்.
தொடரும்


Leave a Reply