Epi 10_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi

களைப்பில் உறங்குகின்றவளின் உடையை கவனித்தான். நேற்று அலுவலகத்திற்கு உடுத்த உடை. அவளிடம் தான் காதல் சொன்ன போது அவள் உடுத்திருந்த உடை. பச்சை நிறப் பிண்ணனியில் சிகப்பு பூக்கள் சிதறி இருந்த அந்த சல்வார் கமீஸில் முன் தினம் நிகழ்ந்த பிரச்சனையில் அவள் இரத்தம் சிதறி இருந்ததை கவனித்தால் மட்டும் கண்டுக்கொள்ள முடிந்தது.  

நேற்றைய இனிமை தோய்ந்த அதே நாளில் இந்த வேண்டாத நினைவுகள் இணைந்திருக்க வேண்டாம் என்று எண்ணினாலும் அடுத்து என்னச் செய்வது? என்று சிந்திக்க ஆரம்பித்தான். அவளுக்கு புதிய உடைகளை வாங்கி விடலாம். ஆனால், உள்ளுடைகள்? வேறு வழியில்லாமல் அவள் வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.

பையில் அவள் வீட்டின் சாவி இருந்ததை சரிப் பார்த்துக் கொண்டான். அவன் எண்ணியது போலவே அந்த குடியிருப்பை அவன் அடையும் போது சற்று கூட்டம் சேர்ந்து இருந்தது மிகவும் சலசலப்பாக இருந்தது. மக்களுக்கு ஊர்வம்பு பேசுவதில் எத்தனை இன்பம்.

அவசரமாக குழந்தைகளை ஊரில் விட்டு விட்டு மஞ்சு இரவோடு இரவாக புறப்பட்டு வந்திருந்தாள். புறப்பட்டு, பயணித்து பிரனீத் அங்கே போய் சேர பதினோரு மணி ஆகி விட்டிருந்தது. “ஆலீஸ் எங்கே எங்கே?” என அனைவரும் அவனிடம் கேட்டனர். “அவள் கையில் கத்திப் பட்டு விட்டதால் அவளுக்கு காய்ச்சல் வந்து விட்டது. ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து இருக்கிறேன்” என்று கூறவும் கூட்டமே உச்சுக் கொட்டியது.

அவனது பேச்சுத் தோரணையில் கண்டிப்பு கண்டு மற்றவர்கள் பயந்து விலகி நிற்க, மஞ்சு அழுதுக் கொண்டிருந்தாள். “இந்தாள் இப்படி செய்வார்னு தெரியாதே? ஆலிஸ் பாப்பா முதல்லயே சொல்லிருந்தா நான் அவரை தட்டிக் கேட்டிருப்பேன்” என புலம்பினாள்.

“உங்க புருஷன் இலட்சணத்தை உங்களுக்கு காட்டட்டுமா? தனது மொபைலில் இருந்த வீடியோவை எடுக்க முயல, வேண்டாம் தம்பி அதுதான் ஊரெல்லாம் பரவி நாறிட்டு இருக்கே? என் பொழப்பு வீணா போச்சுதே” ஒப்பாரி வைத்தாள்.

Pages: 1 2 3 4 5 6 7 8


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!