Epi 10_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi

“பசிக்கலயே” மறுத்தவளுக்கு உணவை ஊட்ட கையை நீட்ட, அந்த ஃபேமிலி ரூமில் இருந்தாலும் பொதுவிடம் என உணர்ந்தவள் அவன் கையிலிருந்த உணவை தன் கையில் பெற்று உண்டாள். அவள் கண்களினின்று கண்ணீர் சரசரவென இறங்கியது. அவசரமாய் அங்கிருந்த டிஷ்யூவை எடுத்து அவள் கண்ணீரை துடைத்தவன் அவளை அதட்டினான். அவனது அதட்டலுக்காக உண்ணலானாள் ஒவ்வொரு கவளமும் அவள் தொண்டையில் விக்கிக் கொள்ள கொஞ்சம் கொஞ்சமாய் நீர் அருந்தி விழுங்கிக் கொண்டு இருந்தாள். இரண்டு இட்லிகள் விழுங்கி வைக்கவும் சரி மீதி சாப்பிட முடியலைனா விட்ரு… இப்ப குடிக்க என்ன கொண்டு வரச் சொல்லட்டும்? என்றவன் பதிலளிக்காமல் இருந்தவளுக்கு அவனாகவே காஃபியை வரவழைத்துக் கொடுத்தான்.

தான் உண்டு முடிக்கும் வரை அவனது இடது கரம் அடிக்கடி அவள் கையை பற்றிக் கொண்டு இருந்தது. அவனது கரம், அதன் வெம்மை அது கொடுக்கும் ஆறுதல், அவனது அதட்டல், தன்னை உரிமையானவளாக பிறர் முன் சொன்னது ஒவ்வொன்றாக நினைவிற்கு வர கெடுதலான அனைத்தினின்றும் மனம் ஆறுதல் அடைந்து அவனை கண்ணில் உயிர் தேக்கிப் பார்த்திருந்தாள். ‘இவையெல்லாம் உண்மைதானா? தான் கண்ணை சிமிட்டினால் எல்லாம் மாறிவிடுமோ?” என்பதாக அவனை இமைக்காமல் பார்த்திருந்தாள்.

அவளைக் கண்டுக் கொள்ளாமல் தன் உணவை முடித்தவன் பில்லிற்கு பணம் செலுத்தி இன்னும் ஐந்து நிமிடத்தில் புறப்பட்டு விடுவதாகக் கூறவும் சர்வர் அகன்றுச் சென்றார்.

அவர் கரங்களை ஒன்றிணைத்தவன் தன் கைகளுக்குள் பொதிந்துக் கொண்டான்.

“நான் ஒரு விஷயம் சொன்னா கேட்பியா?” பொம்மை போல தலையசைத்தாள். 

“இன்றைக்கு உன்னை தனியா விட மனம் வரலை, நான் உன் அறைக்கு வரலாம். ஆனால், அங்க இப்ப இந்நேரம் என்ன பிரச்சனையா இருக்குமோ தெரியலை. நீ என்னோட ஹோட்டலுக்கு வரியா? அதுக்கப்புறம் என்ன செய்யறதுன்னு முடிவு செய்யலாம்?

……..அமைதியாக இருந்தவளிடம்…

“நீ என்னை நம்புறல்ல?” என்றான்.

… தன்னைப் போல அவள் தலை ஆம் என ஆடியது… ஏதோ பரிதவிப்பில் இருந்தவன் அவள் பதிலில் மெலிதாய் புன்னகைத்தான்.

“போகலாமா?”

“ம்ம்”

தனக்கு அலுவலகம் மூலமாக தங்க எற்பாடு செய்யப்பட்ட ஹோட்டலுக்கு தொடர்புக் கொண்டு ட்வின் ரூம் ஒன்று புக் செய்தான். என்னோடது சிங்கிள் பெட் வசதி காணாது என புன்னகைத்தான். “ம்ம்” புரிந்தாற்போல தலையசைத்தாள்.

ஹோட்டலை நெருங்கி சாவியை பெற்றுக் கொண்டவன் அவளையும் அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றான். அவளை சுத்தம் செய்து வரச் சொன்னவன், தானும் சுத்தம் செய்து வந்தான். மருத்துவர் கைக்காயத்திற்கு கட்டுப் போட்டு மாத்திரைகளும் வாங்கிக் கொடுத்து இருந்தார். அறைக்குள் வந்ததும் மாத்திரைகள் அவள் எடுத்துக் கொள்ளச் செய்தான்.

“தூங்கு, நான் இங்கேயே தான் இருப்பேன்” ஆறுதலாகச் சொல்ல, ம்ம் என்று படுத்தவள் ஏதேதோ யோசனையில் உழன்றாள். அவளது போர்வையை இழுத்து முழுக்கப் போர்த்தியவன் முதுகை தட்டி விட்டான். அவனது பரிவில் அவள் கண்கள் தூக்கத்திற்கு இறுக்க மூடிக் கொண்டன.

காலை எழுந்தவன் அடுத்த படுக்கையில் ஆலிஸைக் கண்டு முகம் கனிந்தான். மணி பார்க்க அது ஒன்பதரை என்றது. இனி எங்கே அவள் அலுவலகம் செல்வது? கைக் காயத்தை வைத்துக் கொண்டு வேலைச் செய்வதும் சிரமம். ஓய்வெடுக்கட்டும் என எண்ணியவனாக, மணிவண்ணனுக்கு அவள் இன்று வர முடியாது என தகவலை அனுப்பி வைத்தான். அவன் தான் பார்த்துக் கொள்வதாக பதிலளித்தான். புனிதா அன்றைய தினம் ஆலிஸின் டீமை பார்த்துக் கொள்வதாக முடிவானது. இவை எதுவும் அறியாமல் ஆலிஸ் உறங்கிக் கொண்டு இருந்தாள்.

Pages: 1 2 3 4 5 6 7 8


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!